நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல்.

8 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்தத் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பிரமாண்ட விழாவுடன் ஆரம்பமாகிறது.

குறித்த போட்டியின் பிரமாண்ட விழாவில் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, இந்திய ரெப் இசை பின்னணி பாடகரான கரண் அவுஜ்லா ஆகியோரின் இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக விழாக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக நடப்பு ஆண்டு போட்டி நடைபெறும் கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், அகமதாபாத், கவுகாத்தி, மும்பை, லக்னோ, பெங்களூர், சண்டிகர், ஜெய்ப்பூர், டெல்லி, தர்மசாலா ஆகிய 13 இடங்களில் ஆரம்ப விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *