திருஅவையை வழிநடத்தும் 267வது திருத்தந்தையாக அகுஸ்தீன் சபையைச் சார்ந்த கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Robert Francis Prevost என்னும் இயற்பெயர் கொண்ட கர்தினால் அவர்களை திருஅவையின் திருத்தந்தையாக கர்தினால் தோமினிக் மம்பர்த்தி அவர்கள் மே 8 வியாழன் மாலை 7.30 மணியளவில் வத்திக்கான் வளாகத்தின் மேல் மாடத்தில் இருந்து அறிவித்தார்.
வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக, மேல் மாடத்தில் தோன்றிய கர்தினால் தோமினிக் மம்பர்த்தி அவர்கள், Annuntio vobis gaudium magnum: habemus Papam!, “நான் உங்களுக்கு ஒரு பெரிய மகிழ்வான் செய்தியை அறிவிக்கிறேன்: நாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுவிட்டோம்” என்று கூறினார்.
கர்தினால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோவைச் சார்ந்த கர்தினால் Robert Francis Prevost அவர்கள் திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாகத் தேர்த்தெடுக்கப்பட்டு பதினான்காம் லியோ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிவித்தார். மக்கள் அனைவரும் இடைவிடாது கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர்.
1955 – ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அமெரிக்காவின் சிகாகோவில் (Illinois) பிறந்தவர் புதிய திருத்தந்தை 14ஆம் லியோ. 1977-ஆம் ஆண்டில், புனித லூயிசில் உள்ள அவர் ஆலோசனை அன்னை மாநிலத்தில் உள்ள புனித அகுஸ்தீன் (O.S.A) துறவற இல்லத்தில் இணைந்தார். 1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, அன்று துறவற வார்த்தைப்பாடு ஏற்றார். சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் படித்து, இறையியலில் பட்டம் பெற்றார்.
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 15, அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவரை கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், 2023, ஜனவரி 30, அன்று, திருப்பீட ஆயர்பேரவைக்கான தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமித்தார்.