திருஅவையின் 267 ஆவது திருத்தந்தை பதினான்காம் லியோ பற்றிய முழு விபரம்

 திருஅவையை வழிநடத்தும் 267வது திருத்தந்தையாக அகுஸ்தீன் சபையைச் சார்ந்த கர்தினால் Robert Francis, O.S.A. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Robert Francis Prevost என்னும் இயற்பெயர் கொண்ட கர்தினால் அவர்களை திருஅவையின் திருத்தந்தையாக கர்தினால் தோமினிக் மம்பர்த்தி அவர்கள் மே 8 வியாழன் மாலை 7.30 மணியளவில் வத்திக்கான் வளாகத்தின் மேல் மாடத்தில் இருந்து அறிவித்தார்.

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக,  மேல் மாடத்தில் தோன்றிய கர்தினால் தோமினிக் மம்பர்த்தி அவர்கள்,  Annuntio vobis gaudium magnum: habemus Papam!, “நான் உங்களுக்கு ஒரு பெரிய மகிழ்வான் செய்தியை அறிவிக்கிறேன்: நாம் ஒரு திருத்தந்தையைப் பெற்றுவிட்டோம்” என்று கூறினார்.

கர்தினால் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோவைச் சார்ந்த கர்தினால் Robert Francis Prevost அவர்கள் திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாகத் தேர்த்தெடுக்கப்பட்டு பதினான்காம் லியோ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிவித்தார். மக்கள் அனைவரும் இடைவிடாது கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினர்.

1955 – ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று அமெரிக்காவின்  சிகாகோவில் (Illinois)  பிறந்தவர் புதிய திருத்தந்தை 14ஆம் லியோ.  1977-ஆம் ஆண்டில், புனித லூயிசில் உள்ள அவர் ஆலோசனை அன்னை மாநிலத்தில் உள்ள புனித அகுஸ்தீன் (O.S.A) துறவற இல்லத்தில் இணைந்தார். 1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, அன்று துறவற வார்த்தைப்பாடு ஏற்றார். சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் படித்து, இறையியலில் பட்டம் பெற்றார்.

2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 15, அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவரை கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், 2023, ஜனவரி 30, அன்று, திருப்பீட ஆயர்பேரவைக்கான தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *