சோலார் உரிமையாளர்களிடம் மின்சார சபை விடுத்த கோரிக்கை

கூரை மீது பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை (CEB) அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. 

கையடக்க தொலைபேசிகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துவது குறித்து குறுஞ்செய்தி (SMS) வந்திருந்தால் மட்டுமே இன்று (16) முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய மின் பலகைகளை துண்டிக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

கடந்த சில சவால் மிகுந்த நாட்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *