சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள கிழக்கு நிலி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலத்தைக் குறிவைத்து துணை இராணுவப்படையினர் பீரங்கி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகியுள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தலைநகர் கார்டூமினை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் துணை இராணுவப்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.