இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை நடைபெற்ற தாக்குதலில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் – பிஜப்பூர் எல்லையில் இன்று காலை சத்தீஸ்கர்பொலிஸாரும் , பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுவும் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அப்போது நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் 26 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய நக்சல் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேவேளை நவீன ஆயுதங்கள், வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளமையும் குறிப்படத்தக்கது.