கிளிநொச்சியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேரதீவு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது  இன்றையதினம்(15) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 48 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *