இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் இதுவரை 50,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 20 இலட்சம் பேர் பசி, பட்டினியால் தவிப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை 11 வாரங்களில் மட்டும் பசி, பட்டினியால் 57 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.