கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி தொடங்கும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2362 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், பொதுத் தகவல் தொழில்நுட்பத் தேர்வு டிசம்பர் 6, 2025 சனிக்கிழமை நடைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடு முழுவதும் 1665 மையங்களில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *