கல்கிஸை மாநகர சபையில் பணியாற்றிய 19 வயது இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (20) இரவு மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளையைச் சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு உதவியதற்காக இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, நேற்று (20) இரவு, கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.