கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி வேன் மோதி பலி

நிகவெரட்டிய, ரஸ்நாயகபுர பகுதியில் உள்ள பொலிஸ் வீதி தடுப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயகபுர நோக்கி சென்ற வேன் வாகனம் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நபர் காயமடைந்து நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் ரஸ்நாயகபுர பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 37 வயதுடைய அதிகாரியாவார். அவர் கொட்டவெஹெர பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து தொடர்பாக வேன் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட விசாரணைகளில், சாரதி மது போதையில் இருந்தது  தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *