ஹொங்கொங்கில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட எயார் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை அறிந்துகொண்ட விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் ஹொங்கொங்கிலேயே தரையிறக்கினார். இதனால், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.