அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் தனது தொடர்ச்சியான பதிவுகளில் ஈரானை நிபந்தனையின்றி சரணடையுங்கள்! என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அல் கமெய்னியைப் பற்றி குறிப்பிட்டு ட்ரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ,
“‘உச்ச தலைவர்’ என்று அழைக்கப்படுபவர் எங்கே மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு அவர் பாதுகாப்பாக இருக்கிறார் – நாங்கள் அவரை வெளியே எடுக்கப் போவதில்லை (கொல்லப் போவதில்லை), குறைந்தபட்சம் இப்போதைக்கு எங்கள் இலக்கு அவர் அல்ல” என்று கூறியுள்ளார்.