இந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 

மணிப்பூரில் இன்று காலை 11.06 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. 

அடுத்ததாக மதியம் 12.20 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் 2 ஆவது நிலநடுக்கம் பதிவானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அண்டை மாநிலங்களான அசாம், மேகலாயாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *