ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் எழுதுவினைஞர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதிக விலைக்கு மருந்துகளை விற்பனைசெய்த குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் மூன்றாம் தரப்பினர் ஒருவரின் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.