கொழும்பில் அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க கடற்படையின் USS டுல்சா (LCS 16) போர் கப்பல், நேற்று(27) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

வேகம் மற்றும் பல்துறைத் திறனுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல், ஆழமற்ற நீர் மற்றும் திறந்த கடல் இரண்டிலும் இயங்கும் திறன் கொண்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் விஜயம் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையையும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதிக்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இது கடல்சார் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நெகிழ்வான மற்றும் சக்திவாய்ந்த சொத்தாக அமைகிறது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *