ரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலப்பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வத்திக்கான் அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நெஞ்சுசளி பாதிப்பினால் பரிசுத்த பாப்பரசர் பாதிக்கப்பட்டுள்ளார் என வத்திக்கான் அறிக்கை கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சுவாசிப்பதில் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்ததாகவும், தனது உரைகளை வாசிக்கும் பொறுப்பை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது பாப்பரசரின் வயது 88 ஆகும். இந்நிலையில், இன்று காலை ஆராதனைக்கு பின்னர் பரிசுத்த பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வத்திக்கான் தெரிவிக்கப்படுகிறது.